Tuesday 29 January 2013

005 பார்த்தது ! கேட்டது ! படித்தது !

என்னடா பொழப்பு இது, யாராருக்கோ பதில் சொல்ல வேண்டியிருக்கு. வர வர எட்டு, ஒன்பது மணிநேரம் ஆபீஸ்ல ஓடறதே பெரும்பாடா இருக்கே. கருமம் எந்தநேரத்தில பொறந்துதொலச்சமோ - இப்படிதான் சமிபகாலமாக அடிக்கடி மனதில் ஒரு வெறுப்பாக தோன்றுகிறது. சரி ஏதாவது பிஸினெஸ் பண்ணலாம் என்று யோசித்தால் பேங்க் கடன்கள் தொலச்சுபுடுவேன் என்று பயமுறுத்துகிறது. இப்படிதான் அலுவலகத்தில் ஒருநாள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பழைய நண்பர் ஒருவர் நீண்டநாள் கழித்து என்னை பார்க்கவந்தார். "என்னங்க வேலையெல்லாம் எப்படி போகுது "    என்று ஒரேஒரு கேள்விதான் கேட்டேன். "அட நீங்க வேற, ஏண்டா பொறந்தோம்னு இருக்கு. ஆபீஸ்ல கண்ட கண்ட நாய்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டியிருக்கு. காரியம் முடியிறவரைக்கும் மேனேஜ்மென்ட் இனிக்க இனிக்க பேசறாங்க. வேலை முடிஞ்சவிடனே அவங்க சுயரூபத்தை காமிக்கிறாங்க. யாருக்கும் நன்றி என்பதே கிடையாதுங்க. கூட வேல பாக்கும் ஊழியரே முன்னாடி சிரிச்சி பேசிட்டு, பின்னாடிபோய் போட்டுகொடுக்கிறாங்க. யாரை நம்புவதென்றே தெரியிலைங்க.  இந்த ஐ டி கம்பனில வேலை பார்கிரவங்களை பாருங்க. ஜாலியா எந்த தொல்லையுமில்லாம வேலைசெய்யறாங்க. நான் பொறந்த நேரம் இப்படி ஒரு கம்பனில வேலை செய்யனும்னு தலையில எழுதியிருக்கு". என்று பொரிந்து தள்ளிவிட்டார். 

"அட என்னடா தொல்ல, கொடும கொடுமன்னு கோவிலுக்குப்போனா அங்கொரு கொடும அவுத்து போட்டு ஆடுதே " என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். அப்போது ஒரு பையன் வேலைகேட்டு உள்ளே வந்தான். அவன் பயோ டேட்டா வாங்கிப்பார்த்தேன். BE மெக்கானிகல், 65% மார்க். "எந்தவேலையா இருந்தாலும் கொடுங்க சார் செய்யறேன். மெஷின் ஆபரேட்டராகூட வேலைசெய்ய ரெடி சார். சம்பளம் கம்மியா இருந்தாகூட பரவாயில்ல சார்" என்றான் பரிதாபமாக. சரிப்பா எங்க GM கேட்டுட்டு கால் பண்றேன், என்று சொல்லியனுப்பினேன். அவன் போனபிறகு நானும் நண்பரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம் அமைதியாக. பிறகு நண்பரை என் பைக் இல் அழைத்துசென்று பஸ் ஏற்றிவிட்டு வீட்டுக்கு சென்றேன். உள்ளே நுழையும்போதே ஏதோ ஒரு லோக்கல் டிவியில், யாரோ ஒரு பெரியவர், 'கிடைத்ததை வைத்து சந்தோஷமாக வாழ்வதெப்படி' என்று திருக்குறள் எல்லாம் மேற்கோள் காட்டி ரொம்ப சீரிசாக பேசிக்கொண்டிருந்தார். 

***********************************************************************************

உலகில் மனிதன் தோன்றிய நாள்முதல் ஆணாதிக்கமும், பாலியல் தொல்லைகளும் தோன்றியிருக்கிறது. ஆனால் இந்த நாகரிக உலகில், அதுவும் சமீப காலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக சொல்கிறார்கள். ஓகே செய்தி இதுவல்ல. ஏழாம் வகுப்பு மாணவிக்கு ஒரு ஆசிரியர் லவ் லெட்டெர் எழுதிய செய்தியை தினசரியில் படிக்க நேர்ந்தது. நாகை மாவட்டம் ஒரு பள்ளியில் ஒரு மாணவிக்கு 'NAAN UNNAI KAATHALIKKIREN' என்று 'ஆங்கிலத்தில்' எழுதி கொடுத்திருக்கிறார். அந்த புள்ளைக்கு ஒன்னும்புரியாம, அந்த லெட்டரை வகுப்பு ஆசிரியரிடம் காண்பிக்க, அவங்க தலைமை ஆசிரியரிடம் காண்பிக்க, இப்போ லெட்டர் எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட் ஆர்டரோடு வீட்ல அவமானத்தோடு இருக்கிறார். இந்த செய்தியில் நிறைய சந்தேகங்கள் வந்தாலும், அந்த வாத்தியாருக்கு இதெல்லாம் தேவையா என்று பரிதாபப்படத்தோனுகிறது.

***********************************************************************************

 விஸ்வரூபம் - ஒருவாரமாக செய்திதாள்களிலும், சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக தீனிபோட்டுக்கொண்டிருக்கிறது. விவாதம் செய்கிறோம் என்றபேரில் செய்திச் சேனல்கள் 8 மணி நேரங்களை ஓட்டிக்கொண்டிருக்கின்றன. நம்ம படம் வசூலில் கலக்குதோ இல்லையோ, இப்படி பரபரப்பாக செய்திகளில் அடிபடும் - என்று கமலே எதிர்பார்த்திருக்கமாட்டார்.  படத்தை ஒழுங்காக ரிலீஸ் பன்னவிட்டுயிருந்தால் இருபது நாட்களுக்குள் பெட்டிக்குள் முடங்கியிருக்கும் என்று படம் பார்த்த நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.  பிரச்னை எங்கேயோ ஆரம்பித்து, இப்போது எங்கேயோ போய்கொண்டிருக்கிறது. ஜெயா அரசு 144 தடையுத்தரவு போடுமளவுக்கெல்லாம் போனது ரொம்ப ஓவராக தெரிகிறது. விஸ்வரூபம் இப்போது தமிழ்நாடு அரசுக்கு பிரஸ்டிஜ் பிராபலத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. அரசு தடை உத்தரவு பிறப்பித்த உடனே, கமல் முதல்வரை சந்தித்து பேசியிருந்தால் ஒருவேளை பிரச்னை சுமூகமாக முடிந்திருக்கலாம். இப்போதே படத்தின் DVD கள் கிடைப்பதாக கூறுகிறார்கள். ம்ம்ம் வெரன்னசொல்ல, கமலுக்கு நேரம் சரியில்லை.  பிரச்னை பொதுமக்களுக்கு இடையூறாக திரும்பாமல் இருந்தால் சரி.

***********************************************************************************

Saturday 26 January 2013

004 எனது பார்வையில் NBS - லார்கோவும் எனது பங்கு முதலீடும் !

2000 ம் ஆண்டு - கனரா பேங்க் தன் விரிவாக்கப்பணிகளுக்காக ரூ.10/- முகமதிப்புக்கொண்ட பங்குகளை (Shares) பொதுமக்களுக்கு வெளியீட்டு பணத்தேவையை பூர்த்திசெய்துகொண்டது. அப்போது  மாதக்கடைசி என்பதால் நான் Salary ப்ரிபரெஷன் வேளையில் பிசியாக இருந்தேன். பங்குகளை வாங்க கடைசி நாள் என்பதால், நடுவில் கிடைத்த ஒரு மணிநேரத்தில் கனரா பேங்க் சென்று கையில் இருந்த பணத்தில் 400 பங்குகளை வாங்கிபோட்டேன். என் வாழ்நாளில் சேமிப்பு என்று செய்த முதல் நல்லகாரியம் இதுதான்.   ஷேர் வாங்கவேண்டும் என்று என் மனதில் தோன்றக்காரணம் நான் படித்த சப்ஜெக்ட் அப்படி. அதன் பிறகு அதை நான் மறந்தும்போனேன். ஆனால் நான் இன்வெஸ்ட் பண்ண 14000 ரூபாய்க்கு வருடம்தோறும் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தவறாமல் டிவிடெண்ட் வந்துகொண்டிருந்தது.

2007 ம் ஆண்டு - நான் புதிதாக வீடு கட்ட ஆரம்பித்தபோது, நடுவில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது என் ஷேர்கள் ஞாபகம் வந்தது. பங்குகளை விற்கவேண்டுமென்றால் Demat கணக்கு இருக்கவேண்டும். எனவே நானும் என் நண்பன் ஒருவனும் ICICI பேங்க் ல் ஆளுக்கொரு Demat Trading அக்கௌன்ட் ஆரம்பித்தோம். அந்தசமயம் இந்தியன் ஷேர் மார்க்கெட் நன்றாக இருந்தது. அப்போது கனரா பேங்க் ஷேர் ஒன்று ரூ. 350/- க்குமேல் போனது. உடனே நான் என்னுடைய ஷேர்களை ட்ரேடிங் அக்கௌன்ட் க்கு மாற்றி என் 400 ஷேர்களையும், ஒரு ஷேர் ரூ.342/- க்கு விற்பனை செய்தேன். அன்றிலிருந்து இன்றுவரை icicidirect.com ல் ஆன்லைன் ட்ரேடிங் செய்துகொண்டிருக்கிறேன். பங்குச்சந்தை மற்றும் இந்திய நிறுவனங்களை பற்றியும் நிறைய தெரிந்துகொண்டேன். என் அக்கௌண்டில் 15 க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களின் ஷேர்கள் சிறிய அளவில் இருக்கின்றன. 


இவன் சுயபுராணங்களை யார் கேட்டது, என்று நீங்கள் எரிச்சலாவது புரியுது. ஓகே விஷயத்திற்கு வருகிறேன். சமிபத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த முத்து காமிக்ஸ் 40 வது ஆண்டுமலர் நெவர் பிபோர் ஸ்பெஷல் புத்தகத்தில் முதல் மற்றும் இரண்டாவது கதையான, லார்கோ வின்ச் சாகசம் - கான்கிரீட் கானகம் மற்றும் சுறாவோடு சடுகுடு படித்தபோது சந்தோஷமாகவும், என் ஷேர் மார்க்கெட் அனுபவங்களை அசைபோட காரணமாக அமைந்தது.


இந்த இரண்டு கதைகளில் கம்பெனி இணைப்பு, ஷேர்கள், போர்டு மீட்டிங் என்று பக்கத்துக்கு பக்கம் ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததை நான் மிகவும் ரசித்தேன். லார்கோவின் முதல் இரண்டு பாகங்களைவிட இதில் ஆக்க்ஷன் குறைவுதான் என்றாலும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இதற்கு மொழிபெயர்ப்பு முக்கிய பங்காற்றியுள்ளது என்பதை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தகதைகளில் மெல்லிய நகைச்சுவை ஆங்காங்கே எட்டிப்பார்ப்பதை உணரலாம். அதிலும் அந்த முதிர் அழகி லிஸ்ஸா லூ கேரக்டர் ரொம்பவே அலாதியானது.



இந்தக்கதைத் தொடரில் எனக்கு மிகவும் கவர்ந்த ஒன்று மொழிபெயர்ப்பு. முதல் இரண்டு பாகங்களைவிட இதன் தமிழ் பொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.



லார்கோ தொடரின் ஒரிஜினலை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். அதையும் இந்த தமிழ் வடிவையும் ஒப்பீடு  செய்யவிரும்பவில்லை. ஆனால் தமிழில் படிப்பதே எனக்கு முழு நிறைவை தருகிறது.
 
Never Before Special இப்போது ebay இல் கிடைக்கிறது. அதற்கான ஆன்லைன் முகவரி http://www.ebay.in/itm/Muthu-Comics-NEVER-BEFORE-SPECIAL-/221176884780?pt=IN_Books_Magazines&hash=item337f2b6e2c


NBS வெளியான ஜனவரி 11 எனக்கு ஒரு மறக்கமுடியா நாள். அன்றுதான் முகமறியா காமிக்ஸ் வாசக பிரபலங்களை சந்தித்த மறக்கமுடியாத நாள்.
 










ஓகே நண்பர்களே மீண்டும் விரைவில் சந்திப்போம். நன்றி.





Sunday 13 January 2013

003 NEVER BEFORE நேரங்கள் !


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

               உண்மையில் காமிக்ஸ்க்காக அதிகமாக நேரங்கள் நான் ஒதிக்கியதில்லை. கடைகளில் பார்த்தால் வாங்கிப்படிப்பதோடு சரி. முதல்முறையாக லயன் காமிக்ஸ்க்காக சந்தா செலுத்தியதே கடந்த ஆண்டுதான். ஆனால் இப்போது நிறைய நண்பர்களை இந்த காமிக்ஸ் சம்பாதித்து கொடுத்திருக்கிறது. அதன் விளைவாக நண்பர்களுடன் NBS வெளியீட்டு விழாவிற்கு சென்றுவந்தது என்வாழ்க்கையில் மறக்கமுடியா தருணங்கள்.

            
முதல் முறையாக முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.சௌந்தரபாண்டியன், எடிட்டர் விஜயன் மற்றும் விஜயன் அவர்களின் மகன் ஆகியோரை சந்தித்தது, என் வாழ்வின் சந்தோஷமான நாள். காமிக்ஸ் நண்பர்கள் பலரை பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.






நன்றி NBS!




 எங்கள் சந்தோஷ பயணத்தை  நண்பர் "முதலைபட்டாலம்" கலீல் அவர்கள் அழகாக தொகுத்து பதிந்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள் பல.


"அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்"



"HAPPY PONGAL"


வருகை தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் மேலான கருத்துகளை இனிய தமிழில் தெரிவிக்க உதவிக்கு இங்கே கிளிக் செய்யவும்.